+1 514-800-2610

ராஜஸ்தானில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!

2023-07-17 11:00
இந்திய செய்திகள்

ராஜஸ்தானில் சமூகத்தை தாழ்த்தபட்ட  சமூகத்தைசிறுமியை மூன்று பேர் பல்கலைக்கழக வளாகத்தில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் தாழ்த்தப்பட்ட சிறுமி மூன்று நபர்களால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட சம்பவம்  அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஞாயிற்றுக் கிழமை அதிகாலை 4மணி அளவில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

 அஜ்மீரைச் சேர்ந்த 17வயது சிறுமி தனது நண்பருடன் சொந்த ஊரிலிருந்து கிளம்பி  ஜோத்பூர் வரை பேருந்தில் பயணித்துள்ளார். நள்ளிரவானதால் அங்கேயே தங்குவதற்கு இடம் கிடைக்காத நிலையில் சாலையில் நடந்து கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் இளைஞர்கள் சிலர் அவர்களை அணுகி தாங்கள் உதவி செய்வதாகவும், தங்களோடு வரும்படியும் அழைப்பு விடுத்துள்ளனர். உணவு சாப்பிட்டுவிட்டு ரயில் வழியாக பயணத்தை தொடரலாம் ரயில் நிலையத்தை காண்பிக்கிறோம் என அழைத்துள்ளனர்.

இவர்களை நம்பி அந்த சிறுமியும் சிறுவனும் அவர்களோடு சென்றுள்ளனர். ரயில் நிலையத்திற்கு நடந்தே அவர்களை அழைத்துச் சென்ற அந்த கும்பல் அதிகாலை 4மணி அளவில்  பல்கலைக்கழக வளாகம் அருகில் வந்ததும் அவர்களை தாக்கி உடைந்த சுவற்றின் வழியே அவர்களை இழுத்து சென்றனர். அதன்பின்னர் சிறுவனை தாக்கி வாயில் துணியை கட்டி மூவரும் அந்த சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

துயர் பகிர்வு

இராசலிங்கம் மணிமாறன்
இமையாணனை - கனடா மொன்றியலில்
ராஜமோகன் ஆனந்தன்
பிறப்பிடம் - அராலி வடக்கு வதிவிடம் - கனடா மொன்றியல்
முருகேசு திருகோணேஸ்வரலிங்கம்
கல்வியங்காடு - மொன்றியல்
இராசம்மா செல்வராசா
காரைநகர் - சின்னாலடி