தேவையான பொருட்கள் :
மாவு ஜவ்வரிசி
தயிர் - தலா 200 கிராம்
கடுகு, பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன்
மோர் மிளகாய் - 4
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
-
செய்முறை:
- கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். ஜவ்வரிசியை தயிரில் 3 மணி நேரம் ஊற வைத்து, உப்பு சேர்க்கவும்.
- அடி கனமான கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், மோர் மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்து அதில் ஊற வைத்த ஜவ்வரிசி கலவையைச் சேர்த்து நன்றாகக் கிளறவும். கைவிடாமல் கிளற வேண்டும். அடிபிடிக்கக்கூடாது.
- அடுப்பை மிதமான தீயில் வைத்து கொள்ளவும். கடாயில் ஒட்டாமல் களி மாதிரி வரும் போது கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
- இப்போது சூப்பராக ஜவ்வரிசி மோர்க்களி ரெடி