கோத்தபாயாவை கைது செய்து சர்வதேச நீதிமன்றில் நிறுத்தவும் - பியர் பொலிவீரா கோரிக்கை..!!
தற்போது சிங்கப்பூரிலிருக்கும் முன்னாள் ஸ்ரீலங்கா ஜனாதிபதி கோத்தபாயா ராஜபக்சேயினை கைது செய்வது சர்வதேச நீதிமன்றில் முன்நிறுத்தும் கோரிக்கையை ஆதரிப்பதாக கனடிய எதிர்க்கட்சியான பழமைவாத (கொன்சவேடிவ்) கட்சியின் தலைமைக்கான தேர்தலில் முன்னணியில் உள்ள பியர் பொலிவேரா தெரிவித்துள்ளார். அவர் யூலை 28ஆம் நாள்வியாழக்கிழமை ஈழத்தமிழர் விவகாரம் குறித்து தனது நிலையாடுகளை விரிவாக விளக்கி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் மேலும் குறிபிடப்படுள்ளதாவது,
போரினால் கணவனை இழந்துவிட்ட பெண்களுளுக்கு இழப்பீடுகளை வழங்குமாறும் இலங்கையின் வடக்குகிழக்கை இராணுவமயமற்ற பகுதிகளாக்குமாறும் ஓரு தசாப்தத்திற்கு மேலாக வலியுறுத்தி நின்றோம் என்றும் கூறியுள்ளார். ஆனால் அமைதியான எவ்வித போராட்டங்களும் அற்ற வடக்குக்கிழக்கு உலகில் அதிக இராணுமயமாக்கப்பட்ட பிரதேசங்களில் ஒன்றாக மாறியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
இலங்கையிலான இன்றைய குழப்பத்திற்கும் சீர்கேட்டிற்கும் ராஜபக்ச அரசே காரணம் என்ற எமது புரிதலை இன்று உலகே புரிந்துள்ளது.
தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலைக்கு பின்னர் நல்லிணக்கத்தை நீண்டகாலம் நாம் வலுயுறுத்தியது மட்டுமன்றி அரசியல் கைதிகளின் விடுதiயையும் கோரிநின்றோம். அத்துடன் அதிகார வெறி கொண்ட நிறைவேற்று அதிகார சனாதிபதி முறையை ஒளித்துவிடுங்கள் என்ற இலங்கை மக்களின் கோரிக்கைக்கு மரியாதை செலுத்துமாறும் வேண்டுகிறோம்.
அத்துடன் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு ஒத்தாசையாக யாழில் கனடிய துணைத்துதவராலயத்தை அமைப்போம் எனவும், இலங்கையின் போர் குற்றவாளிகள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் அதற்கு அனுசரனையாக கனடாவில் அவர்கள் மீது மக்கன்சி தடைகள் விதிக்கப்படும்ப்படும் எனவும் தெரிவத்துள்ளார்.
கென்சவேட்டிக் கட்சிக்கான புதிய தலைவருக்கான தெர்தலில் அக்கட்சியின் உறுப்பினர்கள் தற்போது வாக்களித்து வருகின்றனர். அதன் முடிவுகள் வரும் செப்டம்பர் 10ஆம் நாள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும்.
அதில் முன்னைய கன்சவேட்டிவ் கட்சியின் பிரதமர் ஸ்ரீபன் காப்பர் உட்பட பலரின் ஆதரவைப் பெற்றிருக்கும் பியர் பொலிவேராவே வெற்றிபெறுவார் என்ற நிலையில் அவர் ஈழத்தமிழர் விவகாரத்தில் இ;வ்வளவு காத்திரமான கருத்துக்களை தெரிவித்திருப்பது மட்டுமன்றி ஈழத்தமிழர் விவகாரத்தில் சர்வதேச அளவில் சிறப்பாக செயல்ப்பட்ட முன்னாள் வெளிவிவகார அமைச்சர்; ஜோன் பெயட்டை இவ்விவகாரத்தில் தனது அலோசககரக நியமித்திருப்பது கனடா வாழ் ஈழத்தமிழர்களுக்கு பெரும் மகிழ்ச்சி தரும் விடயமாகியுள்ளது.