கனடிய அரசு சீனாவில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியை புறக்கணிப்பு..!!
2021-12-27 18:24
கனடிய செய்திகள்
சீனாவில் உய்குர் இன இஸ்லாமியர்கள் இனப்படுகொலை செய்யப்படுவதாக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் குற்றம் சாட்டுகின்றன. ஆனால் குற்றச்சாட்டை சீனா திட்டவட்டமாக மறுக்கிறது. இந்நிலையில், உய்குர் இன இஸ்லாமியர்கள் விவகாரத்தை காரணம்காட்டி அடுத்த ஆண்டு நடைபெற உள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை தூதரக ரீதியில் புறக்கணிப்பதாக கனடா அறிவித்தது.
கனடாவை தொடர்ந்து இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் இதே போல் அறிவித்தன. இந்நிலையில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கு அதிகாரிகளை அனுப்பப் போவதில்லை என ஜப்பானும் அறிவித்துள்ளது.