கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த பசுபிக் வேர்ல்ட் சொகுசு கப்பல் !!
2023-11-20 01:38
இலங்கைச் செய்திகள்
பசுபிக் வேர்ல்ட் என்ற சொகுசு பயணிகள் கப்பல் இன்று அதிகாலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
இந்த கப்பல் 1,691 பயணிகள் மற்றும் 704 பணியாளர்களுடன் எகிப்திலிருந்து வந்துள்ளது.
குறித்த கப்பலில் ஜப்பானிய மற்றும் சீன சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் கொழும்பு, காலி மற்றும் கண்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு பயணிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.