கனடாவில் அகதி ஒருவர் உயிரிழந்ததால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரம்டன் என்ற இடத்தில் கூடாரத்திற்க்கு அருகில் தங்கியிருந்த 40 வயது நிரம்பிய அகதி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் அதிக எண்ணிக்கையிலான அகதிகள் வந்து தஞ்சம் புகும் நகர சபைகளுக்கு, அதிக பாதுகாப்பு மற்றும் உதவி வழங்கப்பட வேண்டும் என்று பிரம்டன் நகர முதல்வரான பெட்ரிக் பிரவுன் கூறியுள்ளார்.
மேலும் இறந்த அகதி கோரிக்கையாளரின் அடையாளம் சார்ந்த எவ்வித தகவலும் வெளியிடப்படவில்லை. உயிரிழந்ததற்க்கான காரணமும் அறியப்படவில்லை.