8 வருடங்களுக்கு பிறகு ஜிகர்தண்டா வெற்றியை தொடர்ந்து இயக்குனர் கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் ஜிகர்தண்டா 2 திரைப்படம் வெளியாகியுள்ளது .
அந்த வகையில், இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஷங்கர், ஜிகர்தண்டா 2 படம் குறித்து கருத்து தெரிவித்து இருக்கிறார்.
இது தொடர்பான பதிவில், "ஜிகர்தண்டா 2 - திரைக்கதை மற்றும் இயக்கத்தை பொருத்தவரை கார்த்திக் சுப்பராஜின் சிறப்பான மற்றும் புத்திசாலித்தனமான படைப்பு.
கதை- சினிமாவுக்கு மரியாதை. எதிர்பார்த்திடாத 2-ம் பகுதி - கதாபாத்திரங்கள் இடையே நேர்த்தியான நகர்வு.
எதிர்பார்த்திடாத 2-ம் பகுதி - கதாபாத்திரங்கள் இடையே நேர்த்தியான நகர்வு.
சந்தோஷ் நாராயணனின் அதரடியான பின்னணி இசை.ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே. சூர்யா சிறப்பான நடிப்பு.
ஒளிப்பதிவாளருக்கு பாராட்டுக்கள்," என்று குறிப்பிட்டுள்ளார்.