இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்காஹ்ன நடிப்பில் உருவாகி வெளியான திரைப்படம் ''ஜவான் ''.
இத்திரைப்படமானது வசூல் ரீதியில் சாதனை படைத்தது வருகிறது.
இதனை படக்குழு கொண்டாடி வருகிறது.
இந்நிலையில், நடிகர் ஷாருக்கான் தனது சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.
அதில், ஒருவர் 'ஜவான்' படத்தின் கடைசி பாடலை பகிர்ந்து, "ஹேய், விக்ரம் ரத்தோர், நீ ஆசாத் மற்றும் பெண்களுடன் மகிழ்ச்சியாக இருப்பதை ஐஸ்வர்யா சொர்க்கத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறாள்.
அவளுக்கு என்ன பதில் சொல்லுவாய்? என்று கேள்வி எழுப்பினார்."
அதற்கு ஷாருக்கான், "நான் மிகவும் ரொமாண்டிக் மற்றும் மனதளவில் பெண்களுக்கு அதிகமாக மதிப்பு கொடுப்பவன் என்று அவளுக்கு தெரியும்.
நான் செய்யும் குறும்பு தனங்களால் அவள் மகிழ்ச்சியடைவாள்.
நீங்களும் மகிழ்ச்சியாக இருங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு வைரலாகி வருகிறது.