வடக்கு ஆபிரிக்க பகுதியில் உள்ள மொரோக்கோ நாட்டில் நில அதிர்வு பதிவாகியிருந்தது. நில அதிர்வு இன்று 6.8 மெக்னிடியூட் அளவில் ஏற்ப்பட்டிருந்ததுடன் அங்குள்ள ஆறு மாகாணங்களிலும் இந்த அதிர்வு உணரப்பட்டதுடன் மின்சாரம் மற்றும் தொலைப்பேசி இணைப்புக்களும் துண்டிக்கப்பட்டிருந்தது.
இந்த அதிர்வில் 820 பேர் பலியானதுடன் காயமடைந்தோரின் எண்ணிக்கை 672 பேராக உயர்வடைந்துள்ளது. மேலும் நில அதிர்வினால் அங்குள்ள பழைய வரலாற்று கட்டிடங்களும் இடிந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.