இலங்கை இராணுவம் பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனர் என நம்பகதன்மை மிக்க தகவல்கள் கிடைத்துள்ள – அமெரிக்க தூதுவர்..!!
இலங்கை இராணுவத்தில் ஏற்படும் மாற்றங்களை நாங்கள் உன்னிப்பாக ஆராய்வோம்.படையினர் கொள்கைள் இராணுவ கலாச்சாரம் போன்றவற்றில் ஏற்படும் மாற்றங்களையும் உன்னிப்பாக ஆராய்வோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மனிதஉரிமைகளை நிலைநாட்டுவதுநம்பகதன்மை மிக்க பொறுப்புக்கூறல் மற்றும் நீதி நடைமுறைகளிற்கான இராணுவத்தின அர்ப்பணிப்பையும் நாங்கள் உன்னிப்பாக அவதானிப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனர் என நம்பகதன்மை மிக்க தகவல்கள் கிடைத்துள்ள பாதுகாப்பு படைப்பிரிவுகளுக்கு அமெரிக்கா உதவிகளை வழங்குவதில்லை என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்பிளிட்ஸ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க சட்டங்கள் மற்றும் அமெரிக்க இராஜாங்க திணைக்களங்களத்தின் கொள்கையின் அடிப்படையில் பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டன என நம்பகதன்மை மிக்க தகவல்கள் கிடைத்துள்ள பாதுகாப்பு படைப்பிரிவுகளுக்கு அமெரிக்கா உதவிகளை வழங்குவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.