மொன்றியலில் காவல்துறை அதிகாரி மீது துப்பாக்கி சூடு - சந்தேகநபர் கைது..!!
மொன்றியலில் வில்லரே - செயிண்ட்-மைக்கேல் - பார்க் நகர பகுதிக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டின் போது காவல்துறை அதிகாரி ஒருவர் காயம் அடைந்தார்.
மேலும் சம்பவம் தொடர்பாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், சிரேமசி சாலைக்கு அன்மித்த பகுதியில் போக்குவரத்து கண்காணிப்பில் ஈடுபட்ட போலீசார் வாகனம் ஒன்றினை நிறுத்தி மேற்கொண்ட சோதனையின் போது வாகனத்தினை செலுத்தி வந்த வருக்கும் காவல்துறை அதிகாரிக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் ஏற்பட்டதாகவும். அதனை தொடர்ந்து வாகனத்தினை செலுத்தி வந்தவர் வாக்குவாதம் காரணமாக காவல் துறை அதிகாரியை துப்பாக்கியால் சுட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கி சூட்டுக்கு உள்ளான காவல் துறை அதிகாரி வைத்தியசாலைக்கு எடுத்து செல்லும் வரை சுயநினைவுடன் இருந்ததாகவும் தொடர்ந்து அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸ் செய்தித் தொடர்பாளர் ஜீன்-பியர் பிரபாண்ட் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேக நபர் கைது செய்யப்பட்டு விசாரணை அதிகாரிகளால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரபாண்ட் தெரிவித்தார்.