அவுஸ்திரேலிய, இந்திய அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்தியா..!!
அவுஸ்திரேலிய, இந்திய அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்றியது.
நான்கு போட்டிகளைக் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியில் அவுஸ்திரேலியாவும், இரண்டாவது போட்டியில் இந்தியாவும் வென்றதுடன், மூன்றாவது போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவுக்கு வந்திருந்த நிலையில், நான்காவது போட்டியை இந்தியா வென்ற நிலையிலேயே தொடரை 2-1 எனக் கைப்பற்றியது.
“இது குறிப்பிடத்தக்க வெற்றி....இந்த வெற்றி இந்திய கிரிக்கெட் வரலாற்றில் என்றும் நினைவில் நிற்கும். இந்திய அணிக்கு 5 கோடி போனஸ் அறிவித்துள்ளோம். இந்த வெற்றி விலை பதிப்பில்லாதது. அனைத்து வீரர்களும் சிறப்பாக செயல்பட்டனர்” என கங்குலி ட்வீட் செய்துள்ளார்.
கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “மாபெரும் டெஸ்ட் தொடர் வெற்றிகளில் இதுவும் ஒன்று. இந்திய அணிக்கு வாழ்த்துக்கள். ஆஸ்திரேலிய அணியும் சிறப்பாக விளையாடியது. இது அற்புதமான டெஸ்ட் தொடர்” எனத் தெரிவித்துள்ளார்.