கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 11,383 பேர் பாதிப்பு; 150 பேர் உயிரிழப்பு..!!
கனடாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆறு இலட்சத்தை கடந்துள்ளது.இதன்படி, கனடாவில் கொரோனா தொற்றினால் இதுவரை ஆறு இலட்சத்து ஆயிரத்து 663பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், கனடாவில் கடந்த 24 மணி நேர காலப்பகுதிக்குள் மாத்திரம் 11 ஆயிரத்து 383 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் அதிகளவிலானவர்கள் ஒண்டாரியோ மாகாணத்தில் 2964 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கனடாவின் சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், கொரோனா தொற்றினால் கனடாவில் இதுவரை 15 ஆயிரத்து 865 உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும், 80ஆயிரத்து 822பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 711பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், நான்கு இலட்சத்து நான்யிரத்து 976பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.