News updated: 5:36Pm
இன்று காலை 8:20 மணியளவில் வில்லரே மற்றும் டில்மாண்ட் சந்திப்புக்கு அண்மித்த பகுதியில் இடம் பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 50 வயதான லூயிஸ் ஃபிரான்ட்ஸ் என்பவர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த மொன்றியல் நகர காவல்துறையினர்,இன்று வியாழக்கிழமை காலை 8:20 மணியளவில் இந்த சம்பவம் இடம் பெற்றதாகவும் இந்த சம்பவத்தில் ஒன்று அல்லது இரண்டு சந்தேக நபர்கள் ஈடுபட்டிருக்கலாம் எனவும் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவரின் உடலின் மேல் பகுதியில் சுட்டுவிட்டு சந்தேக நபர்கள் தப்பித்து விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
லூயிஸ் ஃபிரான்ட்ஸ் ஆபத்தான நிலையில் தொடர்ந்து வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வந்ததாகவும் பின்னர் வைத்தியசாலையில் மரணமானதாகவும் தெரிவிக்கப்படுகிறது.மொன்றியல் கால்வதுறையினர் தொடர்ந்து சம்பவம் இடம் பெற்ற பகுதிக்கு அண்மித்த பகுதியிலுள்ள வீதிகளை மூடி விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட லூயிஸ் ஃபிரான்ட்ஸ் நீண்ட குற்றப் பதிவைக் கொண்டவர் எனவும் கடந்த ஜூலை மாதம், மொன்றியல் நீதிமன்றத்தில் - மற்ற இரண்டு ஆண்களுடன் சேர்ந்து - பாதிக்கப்பட்டவரிடமிருந்து பணம் பறிக்க முயன்றது மற்றும் அதே நபரை அச்சுறுத்தியது போன்ற குற்றங்களுக்காக வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் 5,000 ஜாமீன் வழங்கப்பட்டது. அதனை அத்தொடர்ந்து அவரது வழக்கு எதிர்வருகின்ற ஏப்ரல் மாதம் நீதிமன்றத்திற்கு திரும்ப எடுத்து கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.